Skip to main content

கண்டிப்பாக படியுங்கள் இந்தியர்களே

நாம எல்லோரும் இந்தியர்கள் தானா. நம்ம நாட்டுக்காக சண்டை போடலாம் ஆனா நாம நமக்குள்ள சண்டை போடுறோம்.

சரி இந்தியா காக சண்டை போட முடியாது. நாம ஊருக்கு ஒரு பிரச்சனைன்னு சண்டை போட்ட கூட பரவா இல்ல. நாம ஊருக்குலையே அடிச்சுக்குறோம். நாம நமக்குள்ளயே அடிச்சிட்டு இருந்தா. நம்ம நாட்டுக்காக நம் மக்களுக்காக எப்போ தான் ஒண்ணா சேர்ந்து போராட போறோம்.

இத தான் நம்ம Government use பன்னிட்டு நம்மள ஏமாத்திட்டு இருகாங்க.

நம்ம நண்பர்களுக்கு இருக்குற பிரச்சனை ரெண்டு தான். ஒன்னு பணம் இன்னொன்னு காமம். இந்த ரெண்டு மட்டும் இல்லனா நம்மள எவனும் எதுவும் பண்ண முடியாது.

நம்மாளுங்க லவ் லவ் னு அலையுறாங்க. காசு தான் எல்லாம் னு நினைக்குறாங்க.

Serious ah நாம இத சரி பண்ணி ஆகணும்.

இது சரி இல்ல, அது சரி இல்ல னு நாம சொல்றத விட்டு, நாம முதல சரி ஆகணும். மக்கள் ஒண்ணா சேரனும். இந்தியன் எவனுக்கு பிரச்சன்னை நாளும் அத தட்டி கேக்க எல்லோரும் வரணும்.

எந்த ஒரு rule போடணும் நாளும் Government பயப்படணும். இந்தியன் Government இந்தியர்களுக்காக தான் னு அவங்க உணரணும்.

மக்களே விழித்தெடுங்கள். இப்போவே உங்கள நீங்க சரி செய்ய தொடங்குங்க.

சுபாஷ் சந்திர போஸ் மாதிரி ஒருத்தங்க வருவாங்க. அவங்க initiate பண்ணும் போது நாம எல்லோரும் ஒண்ணா சேர்ந்து இந்தியன்ன யாருனு காட்டணும்.

காசு அதிகம் இருக்கறவன் காசு இல்லாதவன் கிட்ட குடுத்து உதவுங்கள். At least கடன் கொடுத்தாவது உதவுங்கள்.

பெண்களுக்கு ஒரு advice, நீங்க லவ் பண்றிங்கனா பசங்கள அலைய விடாம. அவங்கள நம்ம நாடு முன்னேறத்துக்காக உழைக்க விடுங்க. நம்மாளுங்களுக்கு தனக்கு னு ஒருத்தவங்க வந்தா போதும், வேற பொண்ணுங்கள திரும்பி கூட பாக்க மாட்டாங்க.

நண்பர்களே காமம் வேண்டாம். அனைவரும் நம் சகோதர சகோதிரிகள் என்பதை உணருங்கள். உங்கள் தேவதை உங்களை தேடி வருவாள்.

நம் நாட்டை சுடுகாடாக மாற்ற பல முயற்சிகள் போய்ட்டு இருக்கு. நம்மை காக்க வேண்டியவர்களே அதை செஞ்சிட்டு இருக்காங்க.

நம் நாடு முன்னேற்றத்துக்காக விரைந்து செயல் படுவோம்.

ஜெய் ஹிந்த்.

இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments


  1. அனைத்து எழுத்துக்களும் தமிழ் மொழியில் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாம் ஏமாற்ற படுகிறோம்

இப்பொழுதெல்லாம் யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம் போல. அரசியலே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அரசியல் வர ஆரம்பிச்சிட்டாங்க. GST வந்த உடனே இனிமே உங்க field ல சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டு அரசியல் வந்திருவிங்களா. தமிழ்நாடு ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. மக்களும் மைக் பிடிச்சு பேசுறவங்கள நல்லவன்னு நம்பிட்டு support பண்றங்க. தயவு செய்து யோசிச்சு முடிவெடுங்கள் மக்களே. மக்களுக்கு கஷ்டம் வரும் பொது எட்டி கூட பாக்காதவன் எல்லாம் நமக்கு தலைவனா. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு தோழர்களே. நாம மேலும் மேலும் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணருங்கள். சிந்தித்து செயல் படுங்கள். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

இன்று ஒரு சம்பவம் - பேருந்து

பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், என் அருகில் இரு சகோதிரிகள் அமர்ந்திருந்தனர். பேருந்து நடத்துனர் பயணச்சீட்டு வாங்காதவர்களை வாங்கும் படி கூறினார். ஒரு சகோதிரி தனது இடது கையில் பணம் குடுத்தாள். அதை கண்ட நடத்துனர் சகோதிரியை கண்டித்து வலது கையில் குடுக்கும் படி கூறினார். அந்த சகோதிரி தனது தவறை உணர்ந்து வலது கையில் பணம் குடுத்து பயணச்சீட்டு வாங்கினார். இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காலம் காலமாக நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த பழக்கத்தை நாம் மறந்து வரும் இந்த காலத்தில், ஒரு நடத்துனர் அதை உணர வைத்தது மகிழ்ச்சி அளித்தது. மங்களகரமான காரியங்களுக்கு நாம் பெரும்பாலும் வலது கை தான் பயன்படுத்துகின்றோம். அது ஏன் என்பதை அறியவில்லை என்றாலும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை பின்பற்றுவோம். இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்