Skip to main content

நல்ல எண்ணம் தீய எண்ணம்

நமக்குள் தினமும் 1000 எண்ணங்கள் எழுகின்றன. அவற்றில் சிலது நல்லவை மற்றும் சிலது தீயவை. நமக்கு எழும் எண்ணங்களில் எது நல்லவை மற்றும் எது தீயவை என்று எப்படி அறிவது.

முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது.

நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும்.

ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும்.

உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம்.

சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்பார்.
சமுத்திரக்கனி மகனிடம் "எது அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அத செய், எது சொல்ல வேணாம்னு தோணுதோ அத செய்யாதே ஏன்னா அது தப்பு" என்று கூறுவார்.

நாமும் இதை பின் பற்றினாள் போதுமே. நீங்க என்னும் எண்ணம் பிறரிடம் தயக்கமின்றி கூற முடியும் என்றால் அது நல்லவை. இல்லையேல் அது தீயவை. தீய செயலை முற்றிலும் தவிர்க்கவும்.

ஏன் தீய செயலை தவிர்க்க வேண்டும். தீய செயல் அந்நேரத்தில் சரி என தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு உயர் நிலையை அடையும் பொழுது, அந்த தீய செயல் உங்கள் இன்பத்தை கெடுக்கும். உங்களை மற்றவர்கள் மட்டுமின்றி நீங்களே வெறுக்கவும் செய்யும்.

இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments

Popular posts from this blog

கண்டிப்பாக படியுங்கள் இந்தியர்களே

நாம எல்லோரும் இந்தியர்கள் தானா. நம்ம நாட்டுக்காக சண்டை போடலாம் ஆனா நாம நமக்குள்ள சண்டை போடுறோம். சரி இந்தியா காக சண்டை போட முடியாது. நாம ஊருக்கு ஒரு பிரச்சனைன்னு சண்டை போட்ட கூட பரவா இல்ல. நாம ஊருக்குலையே அடிச்சுக்குறோம். நாம நமக்குள்ளயே அடிச்சிட்டு இருந்தா. நம்ம நாட்டுக்காக நம் மக்களுக்காக எப்போ தான் ஒண்ணா சேர்ந்து போராட போறோம். இத தான் நம்ம Government use பன்னிட்டு நம்மள ஏமாத்திட்டு இருகாங்க. நம்ம நண்பர்களுக்கு இருக்குற பிரச்சனை ரெண்டு தான். ஒன்னு பணம் இன்னொன்னு காமம். இந்த ரெண்டு மட்டும் இல்லனா நம்மள எவனும் எதுவும் பண்ண முடியாது. நம்மாளுங்க லவ் லவ் னு அலையுறாங்க. காசு தான் எல்லாம் னு நினைக்குறாங்க. Serious ah நாம இத சரி பண்ணி ஆகணும். இது சரி இல்ல, அது சரி இல்ல னு நாம சொல்றத விட்டு, நாம முதல சரி ஆகணும். மக்கள் ஒண்ணா சேரனும். இந்தியன் எவனுக்கு பிரச்சன்னை நாளும் அத தட்டி கேக்க எல்லோரும் வரணும். எந்த ஒரு rule போடணும் நாளும் Government பயப்படணும். இந்தியன் Government இந்தியர்களுக்காக தான் னு அவங்க உணரணும். மக்களே விழித்தெடுங்கள். இப்போவே உங்கள நீங்க சரி செய்ய தொடங்குங்க....

நாம் ஏமாற்ற படுகிறோம்

இப்பொழுதெல்லாம் யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம் போல. அரசியலே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அரசியல் வர ஆரம்பிச்சிட்டாங்க. GST வந்த உடனே இனிமே உங்க field ல சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டு அரசியல் வந்திருவிங்களா. தமிழ்நாடு ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. மக்களும் மைக் பிடிச்சு பேசுறவங்கள நல்லவன்னு நம்பிட்டு support பண்றங்க. தயவு செய்து யோசிச்சு முடிவெடுங்கள் மக்களே. மக்களுக்கு கஷ்டம் வரும் பொது எட்டி கூட பாக்காதவன் எல்லாம் நமக்கு தலைவனா. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு தோழர்களே. நாம மேலும் மேலும் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணருங்கள். சிந்தித்து செயல் படுங்கள். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

இன்று ஒரு சம்பவம் - பேருந்து

பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், என் அருகில் இரு சகோதிரிகள் அமர்ந்திருந்தனர். பேருந்து நடத்துனர் பயணச்சீட்டு வாங்காதவர்களை வாங்கும் படி கூறினார். ஒரு சகோதிரி தனது இடது கையில் பணம் குடுத்தாள். அதை கண்ட நடத்துனர் சகோதிரியை கண்டித்து வலது கையில் குடுக்கும் படி கூறினார். அந்த சகோதிரி தனது தவறை உணர்ந்து வலது கையில் பணம் குடுத்து பயணச்சீட்டு வாங்கினார். இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காலம் காலமாக நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த பழக்கத்தை நாம் மறந்து வரும் இந்த காலத்தில், ஒரு நடத்துனர் அதை உணர வைத்தது மகிழ்ச்சி அளித்தது. மங்களகரமான காரியங்களுக்கு நாம் பெரும்பாலும் வலது கை தான் பயன்படுத்துகின்றோம். அது ஏன் என்பதை அறியவில்லை என்றாலும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை பின்பற்றுவோம். இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்