Skip to main content

நல்ல எண்ணம் தீய எண்ணம்

நமக்குள் தினமும் 1000 எண்ணங்கள் எழுகின்றன. அவற்றில் சிலது நல்லவை மற்றும் சிலது தீயவை. நமக்கு எழும் எண்ணங்களில் எது நல்லவை மற்றும் எது தீயவை என்று எப்படி அறிவது.

முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது.

நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும்.

ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும்.

உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம்.

சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்பார்.
சமுத்திரக்கனி மகனிடம் "எது அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அத செய், எது சொல்ல வேணாம்னு தோணுதோ அத செய்யாதே ஏன்னா அது தப்பு" என்று கூறுவார்.

நாமும் இதை பின் பற்றினாள் போதுமே. நீங்க என்னும் எண்ணம் பிறரிடம் தயக்கமின்றி கூற முடியும் என்றால் அது நல்லவை. இல்லையேல் அது தீயவை. தீய செயலை முற்றிலும் தவிர்க்கவும்.

ஏன் தீய செயலை தவிர்க்க வேண்டும். தீய செயல் அந்நேரத்தில் சரி என தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு உயர் நிலையை அடையும் பொழுது, அந்த தீய செயல் உங்கள் இன்பத்தை கெடுக்கும். உங்களை மற்றவர்கள் மட்டுமின்றி நீங்களே வெறுக்கவும் செய்யும்.

இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments

Popular posts from this blog

உதவி செய் அடுத்தவரை உதவவை

என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் நான் நிறைய உதவி செய்வேன் ஆனால் அந்த உதவிகளை பிறரிடம் கூறினால் அது உதவியே கிடையாது என்று. நிறைய தமிழ் படங்களை பார்த்து கற்றுக்கொண்டிருப்பார் போல. நன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். நாம் செய்யும் செயல் நம் நண்பர்களிடம் கூறும் பொது என்ன நடக்கும். 1. நம்மை பற்றி அவர்கள் அறிவார்கள் 2. நம்மை போல அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் உதவி செய்தல் பிறரிடம் கூற கூடாது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்களா அல்லது திருவள்ளூர் ஏதேனும் கூறி இருக்கிறாரா. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நம் மனது நல்லவை விட தீயவையே அதிகமாக ஈர்க்கும். தமிழ் படங்களில் வருவது எல்லாம் பார்த்து ரசிக்கலாம் ஆனால் அதில் வரும் அனைத்தும் உண்மை என்று மட்டும் நம்பி விட வேண்டாம். உதவி மட்டும் அல்ல. நாம் செய்யும் எந்த நல்ல செயல் ஆயினும் அதை பிறரிடம் கூறுவதன் மூலம் அவர்களையும் அச்செயலை செய்ய தூண்டுகோலாக அமையும். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். இந்த பதிவை பிறருடன் பகிரவும்.

இன்று ஒரு தகவல் - Google I'm feeling lucky

நாம் அனைவரும் Google உபயோகிக்கின்றோம். நாம் தினமும் பல்வேறு தகவல்களை Google இல் தேடுகின்றோம். Google இல் "I’m Feeling Lucky" என்னும் ஒரு பொத்தான் இருக்கிறது. அதை நாம் பொதுவாக உபயோகிப்பது இல்லை. இருந்தாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே. பொதுவாக, நாம் Google இல் ஏதேனும் தேடும் பொழுது நாம் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை திரட்டி நமக்கு காண்பிக்கிறது. அதில் எது நமக்கு தேவை என்று அறிந்து நாம் தேர்ந்தேடுக்கின்றோம். Google இல் உங்கள் தேடலை அடிப்படையாகக் கொண்டு சரியான இணைப்பை திறக்க வேண்டும் என்றால். "I’m Feeling Lucky" பொத்தானை நீங்கள் கிளிக் செய்யலாம். அப்படி கிளிக் செய்யும் பொழுது நீங்கள் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை காண்பிக்காமல் நேரடியாக முதல் பக்கத்தை திறந்து விடும். தேடல் பெட்டி காலியாக இருந்தால், Google Doodles Gallery யை திறந்து விடும். இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பைப் பார்க்கவும் Google - I'm Feeling Lucky இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

யார் கடவுள்

3 எழுத்து உச்சரிப்பதனால் 1. கவலை நீங்கும் 2. இன்பம் பெருகும் 3. பசி ஆறும் 4. நோய் தீண்டாது 5. உண்மையான அன்பு கிடைக்கும் மேலும் பல சிறப்புமிக்க அந்த 3 எழுத்து, அம்மா நம் உண்மையான கடவுள்...