Skip to main content

சிறுவனின் கதை

நான் கேட்டறிந்த கதை ஒன்றை இந்த பதிவில் கூற  போகிறேன்

ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான்

காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான்

அச்சிறுவனிடம்,

அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை.

சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள்.

அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது.

சிறுவன்:  (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே.

அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய்.

வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான்.

ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில்,

சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன்

அரசன்: (ஆச்சிரியதுடன்) உண்மையாகவா எங்கே அந்த ஆடு

சிறுவன்: அந்த ஆடு என் வீட்டில் தான் கட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் காவலரை அனுப்பி கொண்டு வாருங்கள். ஆனால் அரசே இந்த சிறப்பு மிக்க ஆட்டை திங்கள், செவ்வாய், புதன், வியாயன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் தவிர வேறு எந்த நாட்களில் வேண்டுமானாலும் கொண்டு வர சொல்லுங்கள்.

அச்சிறுவனின் புத்தி கூர்மையை அறிந்த அரசன், மனம் மகிழ்ந்து அவனுக்கு பல பரிசுகளை அளித்து மகிழ்விட்டான்.

இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

உதவி செய் அடுத்தவரை உதவவை

என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் நான் நிறைய உதவி செய்வேன் ஆனால் அந்த உதவிகளை பிறரிடம் கூறினால் அது உதவியே கிடையாது என்று. நிறைய தமிழ் படங்களை பார்த்து கற்றுக்கொண்டிருப்பார் போல. நன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். நாம் செய்யும் செயல் நம் நண்பர்களிடம் கூறும் பொது என்ன நடக்கும். 1. நம்மை பற்றி அவர்கள் அறிவார்கள் 2. நம்மை போல அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் உதவி செய்தல் பிறரிடம் கூற கூடாது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்களா அல்லது திருவள்ளூர் ஏதேனும் கூறி இருக்கிறாரா. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நம் மனது நல்லவை விட தீயவையே அதிகமாக ஈர்க்கும். தமிழ் படங்களில் வருவது எல்லாம் பார்த்து ரசிக்கலாம் ஆனால் அதில் வரும் அனைத்தும் உண்மை என்று மட்டும் நம்பி விட வேண்டாம். உதவி மட்டும் அல்ல. நாம் செய்யும் எந்த நல்ல செயல் ஆயினும் அதை பிறரிடம் கூறுவதன் மூலம் அவர்களையும் அச்செயலை செய்ய தூண்டுகோலாக அமையும். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். இந்த பதிவை பிறருடன் பகிரவும்.

இன்று ஒரு தகவல் - Google I'm feeling lucky

நாம் அனைவரும் Google உபயோகிக்கின்றோம். நாம் தினமும் பல்வேறு தகவல்களை Google இல் தேடுகின்றோம். Google இல் "I’m Feeling Lucky" என்னும் ஒரு பொத்தான் இருக்கிறது. அதை நாம் பொதுவாக உபயோகிப்பது இல்லை. இருந்தாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே. பொதுவாக, நாம் Google இல் ஏதேனும் தேடும் பொழுது நாம் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை திரட்டி நமக்கு காண்பிக்கிறது. அதில் எது நமக்கு தேவை என்று அறிந்து நாம் தேர்ந்தேடுக்கின்றோம். Google இல் உங்கள் தேடலை அடிப்படையாகக் கொண்டு சரியான இணைப்பை திறக்க வேண்டும் என்றால். "I’m Feeling Lucky" பொத்தானை நீங்கள் கிளிக் செய்யலாம். அப்படி கிளிக் செய்யும் பொழுது நீங்கள் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை காண்பிக்காமல் நேரடியாக முதல் பக்கத்தை திறந்து விடும். தேடல் பெட்டி காலியாக இருந்தால், Google Doodles Gallery யை திறந்து விடும். இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பைப் பார்க்கவும் Google - I'm Feeling Lucky இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

யார் கடவுள்

3 எழுத்து உச்சரிப்பதனால் 1. கவலை நீங்கும் 2. இன்பம் பெருகும் 3. பசி ஆறும் 4. நோய் தீண்டாது 5. உண்மையான அன்பு கிடைக்கும் மேலும் பல சிறப்புமிக்க அந்த 3 எழுத்து, அம்மா நம் உண்மையான கடவுள்...