Skip to main content

சிறுவனின் கதை

நான் கேட்டறிந்த கதை ஒன்றை இந்த பதிவில் கூற  போகிறேன்

ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான்

காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான்

அச்சிறுவனிடம்,

அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை.

சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள்.

அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது.

சிறுவன்:  (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே.

அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய்.

வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான்.

ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில்,

சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன்

அரசன்: (ஆச்சிரியதுடன்) உண்மையாகவா எங்கே அந்த ஆடு

சிறுவன்: அந்த ஆடு என் வீட்டில் தான் கட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் காவலரை அனுப்பி கொண்டு வாருங்கள். ஆனால் அரசே இந்த சிறப்பு மிக்க ஆட்டை திங்கள், செவ்வாய், புதன், வியாயன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் தவிர வேறு எந்த நாட்களில் வேண்டுமானாலும் கொண்டு வர சொல்லுங்கள்.

அச்சிறுவனின் புத்தி கூர்மையை அறிந்த அரசன், மனம் மகிழ்ந்து அவனுக்கு பல பரிசுகளை அளித்து மகிழ்விட்டான்.

இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

நாம் ஏமாற்ற படுகிறோம்

இப்பொழுதெல்லாம் யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம் போல. அரசியலே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அரசியல் வர ஆரம்பிச்சிட்டாங்க. GST வந்த உடனே இனிமே உங்க field ல சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டு அரசியல் வந்திருவிங்களா. தமிழ்நாடு ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. மக்களும் மைக் பிடிச்சு பேசுறவங்கள நல்லவன்னு நம்பிட்டு support பண்றங்க. தயவு செய்து யோசிச்சு முடிவெடுங்கள் மக்களே. மக்களுக்கு கஷ்டம் வரும் பொது எட்டி கூட பாக்காதவன் எல்லாம் நமக்கு தலைவனா. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு தோழர்களே. நாம மேலும் மேலும் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணருங்கள். சிந்தித்து செயல் படுங்கள். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

கண்டிப்பாக படியுங்கள் இந்தியர்களே

நாம எல்லோரும் இந்தியர்கள் தானா. நம்ம நாட்டுக்காக சண்டை போடலாம் ஆனா நாம நமக்குள்ள சண்டை போடுறோம். சரி இந்தியா காக சண்டை போட முடியாது. நாம ஊருக்கு ஒரு பிரச்சனைன்னு சண்டை போட்ட கூட பரவா இல்ல. நாம ஊருக்குலையே அடிச்சுக்குறோம். நாம நமக்குள்ளயே அடிச்சிட்டு இருந்தா. நம்ம நாட்டுக்காக நம் மக்களுக்காக எப்போ தான் ஒண்ணா சேர்ந்து போராட போறோம். இத தான் நம்ம Government use பன்னிட்டு நம்மள ஏமாத்திட்டு இருகாங்க. நம்ம நண்பர்களுக்கு இருக்குற பிரச்சனை ரெண்டு தான். ஒன்னு பணம் இன்னொன்னு காமம். இந்த ரெண்டு மட்டும் இல்லனா நம்மள எவனும் எதுவும் பண்ண முடியாது. நம்மாளுங்க லவ் லவ் னு அலையுறாங்க. காசு தான் எல்லாம் னு நினைக்குறாங்க. Serious ah நாம இத சரி பண்ணி ஆகணும். இது சரி இல்ல, அது சரி இல்ல னு நாம சொல்றத விட்டு, நாம முதல சரி ஆகணும். மக்கள் ஒண்ணா சேரனும். இந்தியன் எவனுக்கு பிரச்சன்னை நாளும் அத தட்டி கேக்க எல்லோரும் வரணும். எந்த ஒரு rule போடணும் நாளும் Government பயப்படணும். இந்தியன் Government இந்தியர்களுக்காக தான் னு அவங்க உணரணும். மக்களே விழித்தெடுங்கள். இப்போவே உங்கள நீங்க சரி செய்ய தொடங்குங்க....