நான் கேட்டறிந்த கதை ஒன்றை இந்த பதிவில் கூற போகிறேன்
ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான்
காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான்
அச்சிறுவனிடம்,
அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை.
சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள்.
அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது.
சிறுவன்: (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே.
அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய்.
வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான்.
ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில்,
சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன்
அரசன்: (ஆச்சிரியதுடன்) உண்மையாகவா எங்கே அந்த ஆடு
சிறுவன்: அந்த ஆடு என் வீட்டில் தான் கட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் காவலரை அனுப்பி கொண்டு வாருங்கள். ஆனால் அரசே இந்த சிறப்பு மிக்க ஆட்டை திங்கள், செவ்வாய், புதன், வியாயன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் தவிர வேறு எந்த நாட்களில் வேண்டுமானாலும் கொண்டு வர சொல்லுங்கள்.
அச்சிறுவனின் புத்தி கூர்மையை அறிந்த அரசன், மனம் மகிழ்ந்து அவனுக்கு பல பரிசுகளை அளித்து மகிழ்விட்டான்.
இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
ஒரு ஊரில் ஆடுகள் மேய்க்கும் புத்திசாலி சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த அந்நாட்டு அரசன் அச்சிறுவனை சோதித்து பார்க்க முடிவெடுத்தான்
காவலனை அழைத்து அச்சிறுவனை அழைத்து வர சொன்னான்
அச்சிறுவனிடம்,
அரசன்: சிறுவனே உன்னிடம் நிறைய ஆடுகள் இருக்கிறது என அறிந்தேன். எனக்கு ஒரு ஆடு தேவை.
சிறுவன்: வணக்கம் அரசரே! என்னிடம் நிறைய ஆடுகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஆடு எதுவோ அதை எடுத்து கொள்ளுங்கள்.
அரசன்: நான் கேட்கும் ஆடு கறுப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் எந்த நிறமும் கொண்டு இருக்க கூடாது.
சிறுவன்: (வியப்புடன்) அரசே, நிறமற்ற ஆடு இவ்வுலகத்தில் எங்கும் இல்லையே.
அரசன்: எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் விரும்பியபடி ஆடு ஒன்றை கொண்டு வர வேண்டும். இல்லையேல் நீ தண்டிக்க படுவாய்.
வருத்தத்துடன் கிளம்பிய சிறுவன் அரசன் தன்னை சோதிக்க நினைப்பதை புரிந்து கொண்டான்.
ஒரு வாரத்திற்கு பிறகு அரசவையில்,
சிறுவன்: வணக்கம் அரசரே, நீங்கள் விரும்பியவாரே பல இடத்தில் தேடி ஒரு ஆட்டை கண்டு பிடுத்து விட்டேன்
அரசன்: (ஆச்சிரியதுடன்) உண்மையாகவா எங்கே அந்த ஆடு
சிறுவன்: அந்த ஆடு என் வீட்டில் தான் கட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் காவலரை அனுப்பி கொண்டு வாருங்கள். ஆனால் அரசே இந்த சிறப்பு மிக்க ஆட்டை திங்கள், செவ்வாய், புதன், வியாயன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் தவிர வேறு எந்த நாட்களில் வேண்டுமானாலும் கொண்டு வர சொல்லுங்கள்.
அச்சிறுவனின் புத்தி கூர்மையை அறிந்த அரசன், மனம் மகிழ்ந்து அவனுக்கு பல பரிசுகளை அளித்து மகிழ்விட்டான்.
இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
Comments
Post a Comment